நடிகர் விஜய் - நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் !

நடிகர் விஜய் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `சர்கார்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன், நடிகர், விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரசன்னா, விஜய்யை பார்த்து நீங்கள் இந்த படத்தில் முதல்வராக நடித்துள்ளீர்களா? என்ற கேள்வியை கேட்டு, ஒருவேளை நீங்கள் முதல்வரானால் என்ன செய்வீர்கள் என்றார்.

அதற்கு பதிலளித்த விஜய்:-

இந்த படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை, ஒருவேளை நான் முதல்வரானால், முதல்வராக நடிக்க மாட்டேன், ஊழலை ஒழிக்க முயற்சி செய்வேன், ஆனால் அது முடியுமா? என்று தெரியவில்லை

மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை. மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால் மாநிலம் நல்லதாகவே இருக்கும் என்று கூறினார்.