தேர்தல் ஆணையம் - வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ம் தேதி தேர்தல்!

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

தமிழக மக்களவை தேர்தலின் போது பணப்பட்டுவாடா நடைபெற்றதாக வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18 -ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இவற்றுக்கான தேர்தல் முடிவு கடந்த மே மாதம் 23 -ம் தேதி வெளியானது.

இதையடுத்து மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இன்று தேர்தல் ஆணையம் வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவோர், வேட்பு மனுக்களை ஜூலை 11-ம் தேதி முதல், 18-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். ஜூலை 19-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூலை 22ம் தேதி கடைசி நாள் ஆகும்.

அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஆகஸ்ட் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.