நடிகர் ரஜினிகாந்த் - சிறையில் உள்ள 7 பேரை பற்றி தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை பற்றி தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக கூறி உள்ளார்.

நேற்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான கேள்வி கேட்டதற்கு எந்த 7 பேர், எனக்கு தெரியாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

எந்த 7 பேர் என்று ரஜினி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்க போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விவகாரம் குறித்து ரஜினிக்கு ஒன்றுமே தெரியாது என்ற மாய தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர்.

என்னிடம் கேட்ட கேள்வியில் தெளிவு இல்லை. ராஜீவ் காந்தி வழக்கில் 7 பேர் என்று கேட்டு இருந்தால் நான் கூறி இருப்பேன். மொட்டையாக அந்த 7 பேர் என கேட்டதால், எந்த 7 பேர் என கேட்டேன்.

ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை பற்றி தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் அந்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.