நடிகை நந்திதா - பாலியல் தொல்லை பற்றி விழிப்புணர்வு வீடியோ

நடிகை நந்திதா பாலியல் தொல்லை பற்றி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை நந்திதா சசிகுமாருக்கு ஜோடியாக அசுரவதம் படத்தில், ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக தான் செய்ய தவறியதை பற்றி பேசுவதாகக் கூறி பாலியல் தொல்லை பற்றி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

சமூகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவது குறித்தும், அதில் இருந்து எப்படி தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சுமார் 4 நிமிடம் பதிவாகியுள்ள நந்திதா பேசியதாவது:-

நாம் வாழும் இந்த சமுதாயத்தில் நம்ம குழந்தைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் எந்த ரூபத்தில், எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது ரொம் கஷ்டம். குறிப்பாக பாலியல் தொல்லை. ஒருவருக்குள் அப்படி ஒரு மிருக குணம் இருக்கிறது என்பதை அவர்கள் முகத்தை பார்த்து நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

அப்படினா எப்படி நம்ம குழந்தை அதை கண்டுபிடிச்சு அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வது ரொம்ப கஷ்டம். நம்ம குழந்தைகளும் அதை புரிந்து கொள்ள முடியாமல் அவர்களுக்கு பலியாகின்றனர்.

பொதுவாக ஒரு குழந்தையை தொட்டுப்பேசி, கொஞ்சி, முத்தம் கொடுப்பதை தமிழக கலாச்சாரத்தில் அவ்வளவு பெரியா தவறா பார்க்கறதில்ல. அதை தான் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் ரொம்ப வசதியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இதைத்தடுக்க நம்முடைய குழந்தைகளை இவர்களிடம் சிக்காமல் பாதுகாப்பதும், யாராவது அப்படி தொந்தரவு செய்தால் அவர்களை துணிச்சலாக காட்டிக் கொடுக்கவும் நம் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.