சுரேஷ் ரெய்னா புது சாதனை படைத்துள்ளார்!

ஐபிஎல் போட்டிகளில் ஆட்டமிழப்பதில் கூட புதிய சாதனை படைத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான சுரேஷ் ரெய்னா.

நேற்று புனேயில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை 13 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கடித்தது.

இந்த போட்டியில் களமிறங்கிய ரெய்னா 2 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 168 ஆட்டங்களில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா, 28 ஆட்டங்களில் நாட்-அவுட்டாக இருந்துள்ளார். 140 ஆட்டங்களில் ஆட்டமிழந்துள்ள அவர், 50வது முறையாக சுழற்பந்து வீச்சாளர்களால் அவுட்டாக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் ராபின் உத்தப்பா, 50 முறை சுழற்பந்து வீச்சாளர்களால் அவுட்டாகி உள்ளார். அந்த சாதனையை சுரேஷ் ரெய்னா சமன் செய்துள்ளார்.

ஆப்-ஸ்பின் பவுலர்களால் 19 முறையும், லெக்-ஸ்பின் பவுலர்களால் 19 முறையும், ஸ்லோ லெப்ட் ஆர்ம் பவுலர்களாக் 11 முறையும், சின்னமன் பவுலர்களால் ஒரு முறையும் அவர் அவுட்டாக்கப்பட்டுள்ளார்.