சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது !

நேற்று டெல்லியில் நடந்த ஐபிஎல் 42-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது.

டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார்.

டெல்லி அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தது. அதிரடி காட்டிய ரிஷப் பந்த் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 63 பந்தில் 15 பவுண்டரி, 7 சிக்சருடன் 128 ரன்கள் குவித்தார்.

இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ரன் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

தவானும், வில்லியம்சனும் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி அரை சதமடித்து அசத்தினர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அதிகப்பட்சமாக தவான் 92 ரன்கள், வில்லியம்சன் 80 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.