சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு வாய்ப்பு !!

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, விஜய் ரசிகர்கள் சிலருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது விஜய்யின் சர்கார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் வருகிற செப்டம்பர் 24-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு நேற்று காலை முதல் அறிவிப்பை அறிவித்தது.

இதைத்தொடர்ந்து இரண்டாவது அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சன்பிக்சர்ஸ் நிறுவனம்

சர்கார் இசை வெளியீட்டு விழாவில், விஜய் ரசிகர்கள் அனைவரும் பங்கேற்கும் அளவுக்கு பிரம்மாண்ட அரங்கம் ஏதும் இல்லை. ஆனால் சர்கார் இசைவெளியீட்டில் கலந்துகொள்ள சிலருக்கு வாய்ப்பளிக்க முடியும். அதற்கான முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.