கோயம்பேடு பேருந்து நிலையம் இனி ! - எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் மாற்றம் !!

இன்று முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என தெரிவித்தார்.

அதன் படி இன்று கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டது.

பேருந்து நிலையத்தின் முகப்பு மற்றும் எல்லா நடைமேடைகளிலும் இந்த பெயரில் தற்போது ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுள்ளன. விரைவில் எலக்ட்ரானிக் பெயர் பலகைகள் மாற்றப்படும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த பெயர் மாற்றம் அறிவித்தவுடனேயே தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கலைஞர் ஆரம்பித்த பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயரை சூட்டுவது, அடுத்தவர் குழந்தைக்கு தனது பெயரை சூட்டுவது போல் உள்ளது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.