150-வது மகாத்மா காந்தியின் பிறந்தநாள் - காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி மரியாதை

இன்று இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

150-வது மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராகுல் காந்தியும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தி அக்டோபர் 2, 1869-ம் ஆண்டு குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி; தாயார் பெயர் புத்லிபாய் ஆகும்.

இன்று காலை டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாட்டில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வம், கவர்மர் பன்வாரில் லால் ரோகித் மற்றும் அமைச்சர்கள், காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் காந்தி சிலை படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் பலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.