ஜேம்ஸ் பி.அலிசன் மற்றும் தசுக்கு ஹன்ஜோ - மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2018-ம் மருத்துவத்துக்கான நோபல் பரிசு புற்றுநோய் மருந்து கண்டுபிடிப்புக்கு ஜேம்ஸ் பி.அலிசன் மற்றும் தசுக்கு ஹன்ஜோ பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட பிரிவுகளில் தன்னிகரற்ற பங்களிப்பை அளித்தவர்களுக்கு, நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இன்று முதல் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் நபர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக மருத்துவத்துகான நோபல் பரிசு ஸ்வீடனின் சுவரோனாவில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் வைத்து இன்று அறிவிக்கப்பட்டது.

முதல் பரிசாக மருத்துவ நோபல் பரிசு பெறும் பெயர்கள் வெளியிடப்பட்டன. ஆலிசனும், ஹான்ஜோவும் இணைந்து புற்றுநோய் சிகிச்சையில் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை முறைப்படுத்தி புற்று நோய் செல்களைக் கட்டுப்படுத்தும் முறையை இவர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்காகவே இவர்களுக்கு பல் பரிசு கிடைத்துள்ளது. இருவரும் சமமாக பகிர்ந்து கொள்கிறார்கள்.

நோபல் பரிசு குழு தலைவர் தாமஸ் பெர்ல் மேன் இதனை அறிவித்தார்.