மத்திய அரசு - பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு கலால் வரியில் 1.50 ரூபாயும், எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், குறைத்துள்ளதால் பெட்ரோல் டீசல் மீதான விலை லிட்டருக்கு மொத்தம் ரூ.2.50 குறைகிறது.

தினம் தினம் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் பொதுமக்களும், வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை கண்டுள்ளதால், இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன.

இதனால் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் பிரதமர் மோடி இன்று அவசர அலோசனை நடத்தினார்.

இந்த அலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதிமந்திரி அருண் ஜேட்லி:-

தற்போதைய பொருளாதார நிலையை அரசு மிகவும் உண்ணிப்பாக கவணித்து வருகிறது. ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க அரசு ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் பேரலுக்கு 86 டாலராக உயர்ந்துள்ளது. இது பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணாமாக அமைந்து விட்டது.

எனவே பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ரூ.1.50 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையில் 1 ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளது.

இதனால் மொத்தம் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 குறைகிறது. இதைப்போன்று மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதனா விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு மாநிலங்கள் விலையை குறைத்தால் மொத்தம் ரூ.5 குறைய வாய்ப்புள்ளது என்று கூறினார்.