ஐசிசி எச்சரிக்கை - தோனி ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்தால் கிரிஸைத் தாண்ட வேண்டாம்!

மகேந்திர சிங் தோனி ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்தால் கிரிஸைத் தாண்ட வேண்டாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலவச அறிவுரை வழங்கியுள்ளது.

ஸ்டெம்புக்கு பின்னால் டோனி நிற்கும்போது பேட்ஸ்மேன்கள் யாரும் கிரீஸிலிருந்து காலை எடுக்காதீர்கள் என ஐசிசி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவு இணையத்தில் மிகுந்த கவனத்தை பெற்றுவருகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோனி, கிரீஸைவிட்டு வெளியேவந்த நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீசமை, கண் இமைக்கும் நேரத்திற்குள் ரன் அவுட் ஆக்கினார்.

இந்த நிலையில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர், தங்களுக்கு ஏதாவது கிரிக்கெட் அறிவுரை இருந்தால் கொடுங்கள் என ஐசிசியின் டுவிட்டர் பக்கத்தில் கேட்டார்.

இதற்கு ஐசிசி, ஸ்டெம்பிற்கு பின்னால் டோனி நிற்கும்போது, பேட்ஸ்மேன்கள் யாரும் கிரீஸைவிட்டு காலை எடுக்காதீர்கள் என பதில் அளித்திருந்தது.

அதாவது உங்களுக்கென வாழ்க்கையில் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக் கோட்டை நீங்கள் எப்போது தாண்டக் கூடாது என்பதைக் குறிப்பிடும் விதமாக கூறப்பட்டிருந்தது.

ஐசிசியின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.